ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள தொகுதி மறு வரை மசோதாவை கண்டித்து ஈரோட்டில் மாநில மாணவரணி சார்பில் பெரியார் நகர் 80 அடி சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில மாணவரணிச் செயலாளர் ஈரோடு ஜெ. வீரமணி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இக்கட்டத்தை திரும்ப பெறக்கோரி ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர்கள் ஆ. செந்தில்குமார், க சின்னையன், செல்லப்பொன்னி, ப க பழனிச்சாமி, டி எஸ். குமாரசாமி, மாநகரக் கழக செயலாளர் மு. சுப்பிரமணியன், பகுதி செயலாளர்கள் அக்னி டி சந்திரசேகரன், வி சி நடராஜன், வில்லரசம்பட்டி ஏ. முருகேசன், குறிஞ்சி என். தண்டபாணி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தனசேகர், துணை அமைப்பாளர் சி என் கார்த்திகேயன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் திலகவதி, ஸ்ரீதர், மாணவரணி துணை அமைப்பாளர்கள் சதீஷ்குமார் நல்லசிவம் விஜயகுமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தொகுதி மறு வரையறை, திமுக மாணவர் அணி கண்டன ஆர்ப்பாட்டம்!
Oplus_16908288

More Stories
தமிழகத்தில் நாளை முதல் ஏப்.23-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
அதிமுக, பாஜக வேட்பாளர்கள் சொத்து விவரங்கள் குறித்து விசாரிக்கக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு
கரூரில் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை