ஒரே கல்லினால் உருவான நாமக்கல் மலையின் மேற்குப்புறத்தில், நாமகிரித்தாயார் உடனுறை நரசிம்மசாமி திருக்கோயில் உள்ளது. இங்கு லட்சுமி நரசிம்மர், மூலவர் மலையைக்குடைந்து குடவறைக்கோயிலாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கோயிலிக்கு நேர் எதிர்புரத்தில் ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் இரவு பகல் 24 மணி நேரமும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
மலையின் கிழக்குப்பகுதியில் அரங்கிநாயகித்தாயார் உடனுறை அரங்கநாதர் கோயில் அமைந்துள்ளது. இங்கு கார்க்கோடகன் என்ற பாம்பின்மீது ரங்கநாதர் அனந்த சயன நிலையில் மலையைக்குடைந்து குடவறைக்கோயிலாக அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில், இந்த மூன்று தெய்வங்களுக்கும் ஒரே நாளில் தேர்த்திருவிழா நடைபெறுகிறது. இந்த தேர்த்திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி காலையிலும், மாலையிலும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.
கடந்த மார்ச் 31ம் தேதி மாலை, குளக்கரை மண்டபத்தில் சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் விழாவில் கலந்துகொண்டு சுவாமிக்கு மொய் சமர்ப்பித்து வழிபட்டனர். ஏப். 1ம் தேதி குதிரை வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்து வேடுபரி உற்சவம் நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, கோட்டையில் உள்ள நரசிம்ம சுவாமி தேரோட்டம் இன்று 2ம் தேதி, காலை 9 மணிக்கு நடைபெற்றது. முன்னதாக நாமகிரித்தாயார் மற்றும் நரசிம்மர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து தேர் சக்கரங்களுக்கு பட்டாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகளை செய்தனர்.
கோயில் உதவி கமிஷனர் இளையராஜா. அறங்காவலர் குழு தலைவர் தென்பாண்டியன் நல்லுசாமி, அறங்காவலர்கள் சீனிவாசன், டாக்டர் மல்லிகா, செல்வசீராளன், ரமேஷ்பாபு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், வடம்பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர்வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

More Stories
அம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 100% தேர்ச்சி பெற்று மாணவர்கள் சாதனை
நாமக்கல் மாவட்டம்
இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துக் கொண்டபோது முன்னாள் திருப்பூர் மேயர் திருமதி .விசாலாட்சி அவர்களும் உடனிருந்தார்