நாமக்கல் மாநகராட்சி புதிய பேருந்து நிலையம் சேலம் மெயின் ரோட்டில், முதலைப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் நுழைவு வாயிலில், மாநகராட்சி சாõர்பில் ரூ. 44.20 லட்சம் மதிப்பில் அண்ணா நினைவு வளைவு என்ற பெயரில் ஆர்ச் அமைக்கப்பட்டுள்ளது.
அதன் திறப்பு விழா நாமக்கல் மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஷ்குமார், எம்.பி., தலைமையில் நடைபெற்றது. எம்எல்ஏ ராமலிங்கம், மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் அலங்கார வளைவை திறந்து வைத்தார். மாநகராட்சி நியமன கவுன்சிலர் மணிமாறன் கல் வெட்டை திறந்து வைத்தார்.
விழாவில் மாநகராட்சி ஆணையர் சிவக்குமார், நகர திமுக செயலாளர்கள் ராணா ஆனந்த், சிவக்குமார், மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

More Stories
உடன்குடியில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகை,ரெக்கம் ரூ 25 ஆயிரம் கொள்ளை:- மர்ம நபர்கள் கைவரிசை!
திருச்செந்தூர் .மார்.13
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட நிர்வாக குழு கூட்டம் மாவட்ட செயலாளர் சு.கணபதி தலைமையில் நடைபெற்றது.