July 25, 2026

நீட் விவகாரத்தில் பிரதமரின் அறிவிப்பு வெறும் கண் துடைப்பு நாடகம் -மாணிக்கம் தாகூர்..

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள “விரைவு நீதிமன்றங்கள்” அமைக்கும் திட்டம் வெறும் “கண் துடைப்பு நாடகம்” என விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

  • 880 விரைவு நீதிமன்றங்களில் ஏற்கனவே 13.9 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
  • ITSC சிறப்பு நீதிமன்றங்களில் நிலுவை வழக்குகள் 2,45,579 ஆக உயர்ந்துள்ளன.
  • தேர்வு முறையை நேர்மையாக நடத்தத் தவறிய NTA முற்றிலும் தோல்வியடைந்த அமைப்பு என்றும் குற்றம்சாட்டினார்.

மேலும், அவர் பிரதமரிடம் மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்:

  1. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
  2. பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் மத்திய அரசு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
  3. அமைதியான முறையில் போராடிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்கு முன்பு பிரதமர், வினாத்தாள் கசிவு வழக்குகளை விரைவாக விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் குறித்து அறிவித்திருந்தார்.

Spread the love