பழனி மே 25

பழனி முருகன் கோயில் வைகாசி விசாகம் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பழனி பெரியநாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாகம் திருவிழாவையொட்டி, நேற்று கொடியேற்று விழா நடைபெற்றது. இவ்விழாவில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன், சர்வ அலங்காரத்தில் வீற்றிருந்தார். முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் மகாதீப ஆராதனை நடைபெற்றது. இதில் கோவில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து, கோயில் அறங்காவலர் அன்னபூரணி, பில்டிங் காண்ட்ராக்டர் நேரு, பெரியநாயகி கல்வி அறக்கட்டளை சுந்தரம், தமிழக வெற்றி கழக நகர செயலாளர் மீதுன் மனோகரன், கோயில் சூப்பிரண்டு அழகர்சாமி உள்பட ஏராளமான பங்கேற்றனர்.

More Stories
மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயில் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும் – 9
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்