July 1, 2026

பாக்யராஜ் மறைவு| “இறுதி அஞ்சலியை கூட நிம்மதியாக செய்ய முடியவில்லை..” ராதிகா சரத்குமார் வேதனை!

மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி அஞ்சலியை கூட நிம்மதியாக நடத்த முடியவில்லை என்று ராதிகா சரத்குமார் வேதனை தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர், எழுத்தாளர் கே.பாக்யராஜ் திடீர் மரணம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 73 வயதில் மறைந்த அவருக்கு பெசன்ட் நகர் மின் மயானத்தில் இறுதி அஞ்சலி நடைபெற்றது. 50 ஆண்டுகால நண்பரான ராதிகா சரத்குமார், சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களின் அத்துமீறல் காரணமாக இறுதி அஞ்சலியையும் நிம்மதியாக செய்ய முடியவில்லை என்று வேதனை தெரிவித்தார்.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரும், சிறந்த திரைக்கதை ஆசிரியருமான கே.பாக்யராஜ் திடீர் உடல்நலக்குறைவால் தன்னுடைய 73 வயதில் இயற்கை எய்தினார். நல்ல உடல்நலனுடன் திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருந்த அவர், மறுநாள் திடீரென இறந்த செய்தி அனைத்து திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

k bhagyaraj passed away updates

கே. பாக்யராஜ்எக்ஸ் தளம்

ஜூன் 27ஆம் தேதி மறைந்த அவருடைய உடலுக்கு ஜூன் 28ஆம் தேதி பெசன்ட் நகர் மின் மயானத்தில் 11 மணிபோல இறுதி அஞ்சலி செய்யப்பட்டது.

இந்தசூழலில் தான் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியை கூட நிம்மதியாக செய்ய முடியவில்லை என்று ராதிகா சரத்குமார் வேதனை தெரிவித்துள்ளார்.

Spread the love