மாமல்லபுரத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய விஜய், தனது பேச்சின் துவக்கத்தில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு பா.ஜ.க. அழுத்தம் தருவதாக வெளிவரும் யூகங்கள் குறித்துப் பேசினார். இதற்கடுத்ததாக தி.மு.க. – அ.தி.மு.க. குறித்து பேச ஆரம்பித்தார்.
“தமிழகத்தை இதற்கு முன் ஆண்டவர்கள் பா.ஜ.கவுக்கு நேரடியாக ‘சரண்டர்’ ஆனார்கள். இப்போது ஆண்டு கொண்டிருப்பவர்கள் மறைமுகமாகச் ‘சரண்டர்’ ஆகியிருக்கிறார்கள். ஆட்சி அதிகாரத்துக்கு வந்தபிறகு, இதற்கு முன் இருந்தவர்களைப் போலவோ அல்லது இப்போது இருப்பவர்களைப் போலவோ ஒரு பைசா கூட ஊழல் செய்ய மாட்டேன். ஊழல் சக்தி, தீய சக்தி ஆகிய இருவரும் தமிழகத்தை ஆளவே கூடாது” என்று குறிப்பிட்டார்.

More Stories
நீலகிரியில் ரூ.2.59 கோடி பணம், தங்கம் பறிமுதல்.. சுற்றுலா செல்பவர்கள் கவனமுடன் செயல்பட எச்சரிக்கை!
போத்தனூர் – கரூர் புதிய ரயில் பாதை: சேலம் கோட்டத்திற்கு பயணிகள் சங்கம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!
திருமங்கலம் மற்றும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தேர்தல் பொது பார்வையாளர் அவர்கள் வாக்குப்பதிவு மையத்தில் ஆய்வு செய்த புகைப்படம்