முதல்வர் விஜய், மனைவி சங்கீதா இடையேயான பிரச்சனை தீர்ந்து நீலாங்கரை பங்களாவில் மீண்டும் சேர்ந்து வாழ ஆரம்பித்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்த நல்ல மாற்றத்திற்கு காரணம் விஜய்யின் அம்மா ஷோபா என்கிறார்கள்.
விஜய், சங்கீதா சொர்ணலிங்கம் விவாகரத்து வேண்டாம் என சமரசமாக பேசி மீண்டும் சேர்ந்துவிட்டதாக தகவல் வெளியாகி தளபதி ரசிகர்களை குஷியாக்கியிருக்கிறது.
விவாகரத்து கைவிடல்?

முதல்வர் ஜோசப் விஜய்க்கும், நடிகைக்கும் திருமணத்தை மீறிய உறவு இருக்கிறது. அந்த உறவால் என்னை கொடுமைப்படுத்தி வந்தார். 2021ம் ஆண்டும் அந்த உறவை கண்டுபிடித்து கேட்டேன். முதலில் நிறுத்திக் கொள்கிறேன் என்றவர் பின்னர் நிறுத்தவில்லை. எனவே, எனக்கு விஜய்யிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என்று குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் சங்கீதா சொர்ணலிங்கம். ஜூன் 15ம் தேதி அந்த மனு விசாரணைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில் விவாகரத்து வேண்டாம் என்று அவர்கள் முடிவு செய்திருக்கிறார்களாம்.
விஜய் மனைவி, பிள்ளைகள்

பொது வாழ்க்கைக்கு வந்துவிட்ட விஜய்க்கு குடும்ப பிரச்சனை தான் பெரும் பின்னடைவாக இருந்து வருகிறது. அவர் கட்சி துவங்கியதில் இருந்து முதல்வராக பதவியேற்ற நிகழ்ச்சி வரை சங்கீதாவோ, பிள்ளைகள் ஜேசன் சஞ்சய், திவ்யா சாஷாவோ வரவில்லை. பதவியேற்பு விழாவில் முக்கியமான ஆட்களான சங்கீதா, குழந்தைகள் இல்லாமல் யார் யாரோ முதல் வரிசையில் இருக்கிறார்கள் என்று பலரும் விமர்சித்தார்கள். இந்நிலையில் தான் விஜய்யின் குடும்பம் மீண்டும் சேர்ந்திருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.
ADVERTISING
நீலாங்கரையில் சங்கீதா?

மகனை மனைவியுடன் சேர்த்து வைக்க ஷோபா சந்திரசேகர் தான் முதலில் முயற்சி எடுத்தாராம். இதையடுத்து நெருங்கிய உறவுகள் சிலரும் விஜய் மற்றும் சங்கீதாவிடம் பேசி பிரிந்து வாழ்ந்தது போதும். இனி சேர்ந்து வாழுங்கள். அது தான் உங்களுக்கு நல்லது என்றார்களாம். இதையடுத்து லண்டனில் இருந்து கிளம்பி வந்து விஜய்யுடன் ஒரே வீட்டில் வசிக்க ஆரம்பித்துவிட்டாராம் சங்கீதா. விவாகரத்து மனு விபரம் லீக்கானபோது சங்கீதாவை மோசமாக விமர்சித்த விஜய் ரசிகர்கள் தற்போது இந்த மாற்றம் குறித்து அறிந்து சந்தோஷப்படுகிறார்கள்.
அண்ணி வந்துட்டார்

நல்ல வேளை சங்கீதா அண்ணி திரும்பி வந்துவிட்டார். ஜூன் 22ம் தேதியை நினைத்து இனி கவலை இல்லை. அண்ணி இருக்கும்போது இனி விஜய்ணா அருகில் வேறு யாரும் வர முடியாது. மனைவியை விரட்டிவிட்டார் முதல்வர் விஜய் என இனி ஒருவர் கூட குறை சொல்ல முடியாது. எங்கள் மனதில் இருந்த பெரிய பாரமே குறைந்துவிட்டது. இனி விஜய்ணாவின் பர்சனலை யாரும் விமர்சிக்க மாட்டார்கள். அவர் நிம்மதியாக மக்கள் பணி செய்யலாம் என்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.
ஒரே வீட்டில்

முன்னதாக விவாகரத்து கேட்டதால் நீலாங்கரை பங்களாவில் வசிக்க விடாமல் வக்கீல் மூலம் மிரட்டுகிறார் விஜய். அதனால் விவாகரத்து கிடைக்கும் வரை அந்த வீட்டில் தங்க அனுமதிக்குமாறு விஜய்க்கு உத்தரவிட வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் சங்கீதா. தற்போது அவர் வீடு திரும்பியிருப்பதாக கூறியிருப்பது விஜய் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது. இரண்டு பேரமே இறங்கி வந்திருக்கிறார்கள். இது இப்படியே நீடிக்கட்டும் என்கிறார்கள்.

More Stories
அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
மம்தாவுக்கு தொடர்ந்து பின்னடைவு.. ஒரேவாரத்தில் 3 எம்பிக்கள் காலி.. தகர்ந்த TMC கோட்டை!
ரூ.134.83 கோடி மதிப்பீட்டில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம்: முதல்வர் விஜய் அறிவிப்பு