ஓய்வுபெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரியாவிடை!
புதுடெல்லி: “அரசியலில் ‘முற்றுப்புள்ளி’ என்பதே கிடையாது, ஓய்வு பெறுபவர்களின் அனுபவம் சமூகத்திற்கு பயன்படும். மூத்த உறுப்பினர்களிடமிருந்து நாம் கற்பதற்கு ஏராளம் உள்ளது” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையாற்றினார். ஓய்வுபெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி பிரியாவிடை அளித்தார்.
இது குறித்து பிரதமர் பேசும்போது, “ மாநிலங்களவையில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதங்கள் நடைபெறுகின்றன; அவற்றில் ஒவ்வொரு உறுப்பினரும் தங்களது தனித்துவமான பங்கை ஆற்றியுள்ளனர்.
மல்லிகார்ஜுன கார்கே, சரத் பவார், தேவ கவுடா ஆகியோர் தங்கள் வயதில் அதிக நாட்களை பொதுவாழ்விற்கு அர்ப்பணித்துள்ளனர். தங்களின் அனுபவத்தைக் கொண்டு சமுதாயத்திற்கு சேவையாற்ற அடுத்த கட்ட பயணத்தில் அடியெடுத்து வைக்க உள்ளனர். மூத்த உறுப்பினர்களிடமிருந்து நாம் கற்பதற்கு ஏராளம் உள்ளது.
தங்கள் பதவிக்காலம் முடிந்து இம்மன்றத்தை விட்டு விடைபெறும் தலைவர்களிடம் நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். இது போன்ற தருணங்களில், கட்சி எல்லைகளைக் கடந்து ஒற்றுமை உணர்வுடன் நாம் ஒன்றிணைகிறோம். அரசியலில் ‘முற்றுப்புள்ளி’ என்பதே கிடையாது, ஓய்வு பெறுபவர்களின் அனுபவம் சமூகத்திற்கு பயன்படும். எதிர்காலம் உங்களுக்காகக் காத்திருக்கிறது. உங்கள் அனுபவமும், பங்களிப்பும் எப்போதும் நினைவுகூரப்படும்” இவ்வாறு அவர் கூறினார்.

More Stories
வேளாண் பட்ஜெட்டில் மாற்றம் இல்லை; ஏமாற்றம்தான் அதிகமாக உள்ளது: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
ஒரு சொட்டு நீர் கூட இல்லாமல் முற்றிலும் வறண்டு கிடக்கும் சாத்தையாறு அணை..! 2,000 ஏக்கர் விவசாயம் பாதிப்பு…
நெல், கரும்பு ஊக்கத்தொகை உயர்வு குறித்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவிப்பு!