May 18, 2026

டிஜிட்டல் விடைத்தாள் மதிப்பீடு: சிபிஎஸ்இ விளக்கம்

சென்னை: புதி​தாக அமல்​படுத்​தப்​பட்ட டிஜிட்​டல் விடைத்​தாள் மதிப்​பீட்டு முறை​யில் மாணவர்​களின் மதிப்​பெண் குறைவ​தாக சர்ச்​சைகள் எழுந்த நிலை​யில் சிபிஎஸ்இ விளக்​கம் அளித்​துள்​ளது.

இதுகுறித்து மத்​திய இடைநிலைக் கல்வி வாரி​யம் (சிபிஎஸ்இ) வெளி​யிட்ட அறி​விப்பு விவரம்: பிளஸ்-2 தேர்வு எழு​திய மாணவர்​கள் பலர் தங்கள் மதிப்​பெண்​கள் குறித்து மிகுந்த வருத்​தத்​துடன் இருப்​ப​தாக​வும், அதற்கு புதி​தாக அறி​முகப்​படுத்​தப்​பட்ட டிஜிட்​டல் விடைத்​தாள் மதிப்​பீட்டு முறையே காரணம் என்று கருது​வ​தாக​வும் சமூக வலை​தளங்​கள் வழி​யாக தகவல்​கள் வரு​கின்​றன.

மாணவர்​கள் நலனில் சிபிஎஸ்இ எப்​போதுமே அக்​கறை கொண்​டுள்​ளது. புதி​தாக அறி​முகம் செய்​யப்​பட்ட டிஜிட்​டல் விடைத்​தாள் திருத்​தம் நடை​முறை​யானது, அனுபவ​மிக்க ஆசிரியர்​கள் தயாரித்த மதிப்​பீட்டு திட்​டத்​தின் அடிப்​படை​யில், ஒரே மாதிரி​யான மற்​றும் சீரான மதிப்​பீட்டை உறு​தி​செய்​யும்.

மேலும் அந்த மதிப்​பீட்​டில் மாற்று முறை​களில் எழுதப்​பட்ட பதில்​களுக்​கும், மதிப்​பெண் பெறும் வகை​யில் வழி​காட்​டு​தல்​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன.

எனினும் மாணவர்​களுக்கு தங்​கள் தேர்வு முடி​வில், திருப்தி இல்​லை​யெனில், மறுகூட்​டல், திருத்​தப்​பட்ட விடைத்​தாள்​களைப் பார்​வை​யிடு​தல் மற்​றும் மறும​திப்​பீடு கோரலாம்.

தேர்வு முடிவு​கள் தொடர்​பாக, கவலை அடைந்​துள்ள மாணவர்​களுக்கு இலவச ஆலோ​சனை சேவை​யும் 1800-11-8004 என்ற தொலைபேசி வழி​யாக வழங்​கப்​படு​கிறது. மேலும் resultcbse2026@gmail.com என்ற மின்​னஞ்​சல் வாயி​லாக​வும் மாணவர்​கள் தொடர்பு கொள்​ளலாம்​. இவ்​வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Spread the love