பழனி ஜூலை 16
பழனி கோட்டைமேட்டு தெருவில், விசுவாசம் அறக்கட்டளை சார்பில் பழனி மாவட்டத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கும், பழனி 25 வது வார்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கும் பாராட்டு விழாவும், சத்திரப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர் செந்தில் கணேசனுக்கு பாராட்டு விழாவும், மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழாவும், முப்பெரும் விழா நடைபெற்றது. இதற்கு 25 வது வார்டு கவுன்சிலர் ஜன்னத்துல் பிர்தௌஸ் தலைமை வகித்தார். விசுவாசம் அறக்கட்டளை தலைவர் எம்இகே ராஜாமுகமது முன்னிலை வகித்தார். அறக்கட்டளை செயலாளர் ஜியாவு வரவேற்றார். இதில் அதிமுக நகர செயலாளர் முருகானந்தம், காணியாளர் பண்ணாடி ராஜா, ராஜாக்கனி நாடார், டாக்டர் பிரவீன் குமார் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

More Stories
ராமநாதபுரம் மாவட்டம்
ராமநாதபுரம் மாவட்டம்
திருப்பூரில் மிலாடி நபி எனும் நபியின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் சாதிமத பேதமின்றி ஊர் பொது மக்களை ஒன்று திரட்டி அசைவ விருந்து வழங்கிய இஸ்லாமியர்கள்!