சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேர்தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதை எதிர்த்து அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த வழக்கில், வழக்கறிஞர்கள் வாதம் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், 6 அதிமுக எம்எல்ஏ ராஜினாமாவை சட்டப்பேரவை தலைவர் ஏற்றதை எதிர்த்து மதுரையை சேர்ந்த பி.ஜி.சந்திரசேகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “ஒரே விவகாரத்தில் ஏன் அடுத்தடுத்து வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன.
நிலுவை வழக்கை நீர்த்துப்போக செய்யும் வகையில் ஏன் மீண்டும் வழக்கு தொடர வேண்டும்?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து, வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய உள்ளதாக நீதிபதிகள் எச்சரித்ததை அடுத்து, மனுவை திரும்பப் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

More Stories
டெல்லியில் கனமழை: பல பகுதிகளில் சூழ்ந்த வெள்ளம்; விமான சேவை பாதிப்பு
‘அரசியலில் மக்கள் நலனை முன்னிறுத்தியவர்’ – விஜயகாந்த் பிறந்த நாளில் முதல்வர் விஜய் புகழாரம்
சூரியக் கட்சி சிடுசிடு சீனியர் ‘பகுப்பாய்வு’ | உள்குத்து உளவாளி