திருப்பதி: ஆந்திராவில் விசாகப்பட்டினம், விஜயவாடா, குண்டூர், கடப்பா, நெல்லூரில் கரோனா தொற்று பரவி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் 25 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் திருப்பதி நகரின் எஸ்டிவி நகரை சேர்ந்த 65 வயது பெண்மணிக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு தனியார் மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் அவரது குடும்பத்தினருக்கும் கரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

More Stories
மின்வெட்டுக்கு எதிராக தீவிர போராட்டம்; லிபியா அரசுக்கு புதிய நெருக்கடி
நீட் போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் – திரும்பப் பெற பிஹார், அசாம் அரசுகள் முடிவு
மேகேதாட்டு அணை திட்டம் பற்றி டெல்லியில் கர்நாடக எம்.பி.க்களுடன் டி.கே.சிவகுமார் ஆலோசனை