திருப்பதி: ஆந்திராவில் விசாகப்பட்டினம், விஜயவாடா, குண்டூர், கடப்பா, நெல்லூரில் கரோனா தொற்று பரவி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் 25 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் திருப்பதி நகரின் எஸ்டிவி நகரை சேர்ந்த 65 வயது பெண்மணிக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு தனியார் மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் அவரது குடும்பத்தினருக்கும் கரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

More Stories
ஆண்டுக்கு ரூ.100 கோடிக்கு மேல் சம்பாதிக்கும் நபர்களின் எண்ணிக்கை ஐந்தே ஆண்டுகளில் பல மடங்கு உயர்வு.!!
சிஜேபியை தொடர்ந்து இடஒதுக்கீடு எதிர்ப்பு இயக்கம் இணையத்தில் வைரல்
பிரதமர் மோடியின் வீடியோ பேஸ்புக்கில் நீக்கப்பட்டது தொடர்பாக ‘மெட்டா’வுக்கு மத்திய அரசு சம்மன்.