September 5, 2026

தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேகம்…

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கல்லாங்குளம் பகுதியில் அமைந்துள்ள அண்ணாமலையார் கோவிலில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீ அகோரமூர்த்தி கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதையொட்டி சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டு, பைரவருக்கு புனுகு சாற்றப்பட்டது. தொடர்ந்து பல்வேறு வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

அதனைத் தொடர்ந்து, கால பைரவர் சிறப்பு அலங்காரத்தில், எட்டு தீபந்தங்களுக்கு நடுவே மயானத்தை நேருக்கு நேர் பார்த்தவாறு, சிரித்த முகத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தமிழகத்திலேயே மயானத்தை நேருக்கு நேர் பார்த்தவாறு காட்சி தரும் சிறப்புமிக்க கால பைரவர் திருத்தலம் இதுவாகும் என பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த சிறப்பு பூஜையில் ராசிபுரம், புதுப்பாளையம், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Spread the love