July 8, 2026

பழனி அருகே தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.4,21,250 பணம் பறிமுதல் செய்யப்பட்டது

 பழனி ஜூலை 8 

திண்டுக்கல், லஞ்ச ஒழிப்பு போலிஸ் டிஎஸ்பி.நாகராஜன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார்

பழனி அருகே தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்

 இரவு 10 மணி வரை சோதனை நடைபெற்றது இதில் வராத ருபாய் 4,21,250 பறிமுதல் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிகாரப்பூர்வமாக தகவலை வெளியிடவில்லை. நேற்று நடைபெற்ற சோதனையால் தொப்பம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Spread the love