பிப் 23
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மக்களால் நான் மக்களுக்காகவே நான் என வாழ்ந்து மறைந்த ஜெ ஜெயலலிதா அவர்களின் 78வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு 28 வது வார்டு கவுன்சிலர் சேகர் ஏற்பாட்டில் மரக்கடை பஸ் ஸ்டாப்பில் இருந்து மாஸ்கோ நகர் வரை 500க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வருகை தந்து அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தால் அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு 2000 பேருக்கு அறுசுவை அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது விழாவிற்கு வருகை புரிந்த சட்டமன்ற உறுப்பினர் எம்எஸ்எம் ஆனந்தன் அவர்களை குதிரை வண்டியில் அழைத்து ஊர்வலமாக அழைத்துவரப்பட்டார் மேலும் 2000 பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது இந்த நிகழ்வில் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கே என் விஜயகுமார். மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி. எதிர்க்கட்சி கொரடா கண்ணப்பன்.29 வது வார்டு கவுன்சிலர் சின்னச்சாமி.புதிய பேருந்து நிலைய பகுதி செயலாளர் கனகராஜ் உள்ளிட்ட அதிமுக கழக நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் பெரும் திரளாக பங்கேற்றனர் கேரளா கலைக்குழுவினர் ஊர்வல மேளதாள நிகழ்ச்சியினை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்…

More Stories
07-08-2026
பழனியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மீதுதிமுகவினர் காவல் நிலையத்தில் புகார்
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு