July 6, 2026

ராமநாதபுரம் மாவட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தனிப்பிரிவு சார்பு போலீசார் நடத்திய சோதனையில் சதக்கத்துன் ஜாரியா நடுநிலை பள்ளியின் எதிரே அமைந்துள்ள பெட்டிக்கடையில் சிகரெட் புகையிலை மற்றும் பீடிகள் விற்பனை செய்தது தெரியவந்தது பொருட்களை பறிமுதல் செய்து விற்பனை செய்த சிவா என்பவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்து வழக்கு பதிவு செய்துள்ளனர். பள்ளியின் அருகே சிகரெட் மற்றும் பீடிகள் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வது சட்டப்படி குற்றம் எனவே பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகே புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது

Spread the love