June 30, 2026

பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற 10- மற்றும் 12- ஆம் வகுப்பு அரசு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் வெள்ளிப்பதக்கம்

நாட்றம்பள்ளி. ஜூலை-1 

நாட்றம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற முதல் மூன்று மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் வெள்ளிப்பதக்கம் வழங்கும் விழா தலைமை ஆசிரியர் சங்கரன் தலைமையில் நடந்தது. திருப்பத்தூர் மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் சி.இரவிவர்மன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

உதவித்தலைமை ஆசிரியர்கள் ராஜேந்திரன், முருகேசன், மகேந்திரன், பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பத்தூர் ரோட்டரி சங்க தலைவர் பன்னீர்செல்வம், பொருளாளர் அருண்குமார், பயிற்றுநர் ஏலகிரி செல்வம்,புகழேந்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.  பிரிதிவிராஜன் நினைவு கல்வி அறக்கட்டளை நிறுவனர் லட்சுமிரவிவர்மன் சிறப்பிடம் பெற்ற 10,12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை முதல் பரிசாக ரூ-5000,இரண்டாவது பரிசாக ரூ-3000,மூன்றாவது பரிசாக ரூ-2000 என ஆறு மாணவர்களுக்கு வழங்கினார். சங்கரன் வஜ்ஜிரம்மாள் அறக்கட்டளை நிறுவனர் ஆடிட்டர் ரவிக்குமார் ஆறு மாணவர்களுக்கும் தலா 10-கிராம் வெள்ளிப்பதக்கம் வழங்கினார். விழாவில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Spread the love