July 1, 2026

பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை 

ஒரு கோடியை தாண்டியது 

பழனி ஜூலை 01

 பழனி முருகன் மலைக் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. இதில் கோயில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் கோயில் ஊழியர்கள் கல்லூரி மாணவ மாணவியர்கள்  ஈடுபட்டனர். இதில் உண்டியல் காணிக்கை பணமாக ஒரு கோடியே 40 ஆயிரத்து, 575 கிடைத்தது. தங்கம் 187.2 கிராம் கிடைத்தது. வெள்ளி  40.35 கிலோ கிடைத்தது. வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 255 கிடைத்தது. கடந்த ஆண்டுகளை விட தற்போது அதிகபட்சமாக ரூபாய் 61  கோடியே, 21 லட்சத்து, 95 ஆயிரத்து, 387 கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் கூறியுள்ளது.

Spread the love