டெல்லி: ஒரே இரவில் சிலரை ஹீரோக்களாக மாற்றும் பழக்கத்தை நிறுத்துங்கள் என மக்களுக்கு, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனம் அபிஜீத் திப்கே வேண்டுகோள் விடுத்துள்ளார். ராஜ்தீப் சர்தேசாயுடனான பேட்டி ஒன்றில் பேசிய அபிஜீத் திப்கே ஒருவர் அரசியல்வாதி, பிரபலம், அல்லது போராட்ட தலைவர் என யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். எந்தவொரு தனிநபரும் பொறுப்புக்கூறல் ல்லது ஜனநாயக விழுமியங்களுக்கு மேலாக மக்களால் வைக்கப்பட அதாவது கொண்டாடப்பட கூடாது என்று அழுத்தம் திருத்தமாக கூறினார்.
அபிஜீத்திடம், பிரபல பத்திரிகையாளர் ராஜ்நீப் சர்தேசாய் , “இந்த 2 மாத போராட்டங்கள் உங்களை ஒரு ‘எதிர்பாராத ஹீரோவாக’ (Accidental Hero) மாற்றியுள்ளது. இந்த அங்கீகாரம் உங்களுக்குள் அகந்தையை அல்லது கர்வத்தை ஏற்படுத்தியுள்ளதா? என்று கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு தான் அபிஜீத் மேற்கண்டவாறு பதில் அளித்துள்ளார்.
மேலும் அரசியல்வாதிகள் முதல் பிரபலங்கள் வரை அனைவரையும் ஹீரோக்களாக கொண்டாடும் பழக்கத்தை நாம் முற்றிலும் நிறுத்த வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தையும், நாட்டையும் விட ஒரு தனிநபரை உயர்த்தி பிடித்ததன் விளைவே, இன்று நம் நாடு எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் முக்கியக் காரணம். எனவே நாட்டு மக்கள் அனைவரும் இரவோடு இரவாக சக மனிதர்களை ஹீரோவாக கொண்டாடும் கலாசாரத்தை முற்றிலும் நிறுத்துங்கள் எனவும் அபிஜீத் கேட்டு கொண்டுள்ளார்.

More Stories
03-08-2026
03-08-2026
ஒட்டன்சத்திரத்தில் ஸ்ரீ கரைமாரியம்மன் ஏஜன்சீஸ்(எஸ்.கே.எம்) பெட்ரோல் பங்க் திறப்புவிழாமுன்னாள் அமைச்சர் அர.சக்கரபாணி திறந்து வைத்தார்.