ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் மனிதவளத்துறையின் பொது மேலாளர் திரு.S.பார்த்திபன் அவர்கள் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் மாணவ மாணவியரை வேலைக்குத் தேர்வு செய்ய வந்திருந்தனர். மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் மின்னியல், மின்னணுவியல் மற்றும் கணினி துறையைச் சேர்ந்த மாணவ மாணவியர் சுமார் 154 பேர் இதில் கலந்து கொண்டனர். இவர்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில் முத்தாயம்மாள் பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூஷன்-ஐ சேர்ந்த 110 பேர் மற்றும் பிற கல்லூரியிலிருந்து 5 மாணவ மாணவியர் மொத்தம் 115 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் தங்களது இறுதி் ஆண்டு படிப்பை முடித்த பின் வேலையில் சேர உள்ளனர்.
வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா, கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
பணி நியமன ஆணைகளை ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பொது மேலாளர் மற்றும் இன்ஸ்டிடியூசனின் செயலாளர், முதல்வர் ஆகியோர் வழங்கினார்கள்.
வேலை வாய்ப்பைப் பெற்ற மாணவ மாணவியரை கல்லூரியின் தாளாளர் திரு.கே.பி.இராமசுவாமி அவர்கள், நிரவாக அறங்காவலர் திரு.R.முத்துவேல் அவர்கள், செயலாளர் திருமதி.C.மஞ்சு அவர்கள் மற்றும் முதல்வர் Dr.R.மணி அவர்கள், அனைத்துத் துறைத்தலைவர்கள் மற்றும் ஆசிரியர்களும் பாராட்டி, வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

More Stories
முதல்வர் விஜய் பிறந்தநாள், அமைச்சர் ம விஜய்பாலாஜி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!
தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஈரோடு மரப்பாலம் பகுதி கழக செயலாளர் சாதிக் பாட்ஷா ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள்