ஆண்டிபட்டி, ஏப்2, ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அ.தி.மு.க.வேட்பாளராக ஆ.லோகிராஜன் போட்டியிடுகிறார். கடந்த 2 முறை போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்த நிலையில் மூன்றாவது முறையாக களம் காண்கிறார். தேர்தல் பணிகளை தொய்வில்லாமல் பணியாற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளர் ராமர் தலைமை தாங்கினார். வேட்பாளர் லோகிராஜன் மற்றும்கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஆண்டிபட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் டி.ஆர்.என்.வரதராஜன், பேரூர் செயலாளர் அருள்மதி கணேசன்,அருண்குமார், கம்பம் ஜெயகுமார் உள்பட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார்கள்.
ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டம்.

More Stories
திறந்த மறுநாளே மூடப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம்: நடவடிக்கை கோரி மனு
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன் , கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான்ஷீநிகம், ஆகியோர் உடன் இருந்தனர்.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு.ராஜீவ் , மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு வெளிப்பொருத்தும் மற்றும் உட்ப்பொருத்தும் இயந்திரங்களை வழங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் உடனிருந்தார்.