சென்னை: அரசு சட்டப் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டப்பள்ளியில் வழங்கப்படும் முதுகலை சட்டப்படிப்பு (எல்எல்எம்) மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 13 என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மாணவர் நலனை கருத்தில்கொண்டு கடைசி நாள் ஜூலை 17-ம் தேதி மாலை 5.45 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, விண்ணப்பதாரர்கள் சட்டப் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் (www.tndalu.ac.in) வாயிலாக வரும் 17-ம் தேதி மாலை 5.45 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இத்தகவலை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை. பதிவாளர் கவுரி ரமேஷ் தெரிவித்துள்ளார்.

More Stories
தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு தொடங்கியது
துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளியில் பயின்று நீட் தேர்வு எழுதிய 74 மாணவர்களில் 32 பேருக்கு எம்பிபிஎஸ் சீட்
10-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் ஆக.12 முதல் விநியோகம்