நாடாளுமன்றத்துக்கு வெளியே தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் எதிர் எதிராக நின்று கோஷமிட்டனர்.
வினாத்தாள் கசிவு விவகாரத்தை அரசியலாக்குவதாக குற்றம் சாட்டிய ஆளும் கட்சி எம்.பி.க்கள் ‘‘வெட்கக் கேடு, வெட்கக்கேடு’’ என கோஷம் எழுப்பினர். பதிலுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள், ‘‘ராஜினாமா செய், பதவி விலகு’’ என கோஷம் எழுப்பினர்.
இந்தப் போராட்டத்தில் ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா, அகிலேஷ் யாதவ் உட்பட பல தலைவர்கள் கலந்து கொண்டனர். இதற்கிடையே திமுக எம்பி-க்கள் தனியாக ஒரு இடத்தில் நின்று நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யக் கோரி கோஷம் எழுப்பினர்.

More Stories
2029 மக்களவைத் தேர்தலில் வாக்குச் சாவடி எண்ணிக்கை 46% அதிகரிக்கும்
திருப்பதி பிரம்மோற்சவம் தொடங்கியது: முதல்வர் சந்திரபாபு நாயுடு பட்டு வஸ்திரம் காணிக்கை
விநாயகர் சதுர்த்திக்கு கிலோ ரூ.27,000 விலையில் தங்க மோதகம் இனிப்பு – மகாராஷ்டிர கடையில் விற்பனை