May 18, 2026

மும்மொழி திட்டத்தை தமிழக அரசு ஏற்க கூடாது: வைகோ வலியுறுத்தல்

தஞ்சாவூர்: மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ தஞ்​சாவூரில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறியது: சமூக நீதி, மதச்​சார்​பின்​மை, ஜனநாயகம், பெண்​கள் பாது​காப்​பு, தமிழக வாழ்​வா​தா​ரங்​களை காக்​கும் கடமை இவற்​றில் எள்​ளள​வும் பிச​காமல் முதல்​வர் விஜய் ஆட்​சியை நடத்த வேண்​டும்.

மத்​திய அரசின் பி.எம். திட்​டத்​தையோ, மும்மொழி திட்​டத்​தையோ முந்​தைய திமுக அரசு ஏற்​றுக்​கொள்ளவில்லை. அதே நிலைப்​பாட்டை தான் இந்த அரசும் பின்​பற்ற வேண்​டும் என்று வலி​யுறுத்​துகிறேன். நீட் தேர்வு நிரந்​தர​மாக ரத்து செய்​யப்பட வேண்​டும்.

கேள்​வித்​தாள் வெளி​யான சம்பவத்​தால், தேர்வு எழு​திய அனை​வரும் மிகுந்த வருத்​தத்​துக்​கு ஆளாகி உள்​ளனர். இதற்கு பொறுப்​பேற்று மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் ராஜி​னாமா செய்ய வேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

Spread the love