திருப்பத்தூர் மே-15.
திருப்பத்தூர் ரோட்டரி சங்க மூத்த உறுப்பினர்களுக்கு சேவை செம்மல் விருது வழங்கும் விழா தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது. செயலாளர் சி.இரவிவர்மன் வரவேற்புரையாற்றினார். 2028-29-ஆம் ஆண்டின் மாவட்ட ரோட்டரி ஆளுநர் சுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரோட்டரி சங்க மூத்த உறுப்பினர்கள் ஆடிட்டர் ரவிக்குமார், கணேஷ்மல், ஏலகிரிசெல்வம், எழிலரசன்,கிருபாகரன், கிருஷ்ணன், சுப்ரமணியன், லீலாசுப்ரமணியன் உள்ளிட்ட 21-பேருக்கு சேவை செம்மல் விருதுகளை வழங்கி பாராட்டிப் பேசினார். ரோட்டரி சங்க ஜவ்வாது மாத இதழ் வெளியிடப்பட்டு அதன் ஆசிரியர் அருண்குமார் கௌரவிக்கப்பட்டார். திருப்பத்தூர் ரோட்டரி சங்கத்தின் சார்பில் மாவட்ட மாநாட்டு நிதியாக ரூபாய் இரண்டு லட்சம் சுந்தரராஜன் அவர்களிடம் வழங்கப்பட்டது. விழாவில் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். முடிவில் சங்க பொருளாளர் அருண்குமார் நன்றி கூறினார். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு சிற்றுண்டி வழங்கப்பட்டது.

More Stories
திறந்த மறுநாளே மூடப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம்: நடவடிக்கை கோரி மனு
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன் , கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான்ஷீநிகம், ஆகியோர் உடன் இருந்தனர்.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு.ராஜீவ் , மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு வெளிப்பொருத்தும் மற்றும் உட்ப்பொருத்தும் இயந்திரங்களை வழங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் உடனிருந்தார்.