சென்னை: ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி தமிழகம் முழுவதும் 45 ஆயிரம் மருந்து கடைகள் மூடப்பட்டன. ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க கோரி நாடுமுழுவதும் மருந்து வணிகர்கள் நேற்று வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடுமுழுவதும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12.5 லட்சம் மருந்தகங்களும், தமிழகத்தில் மட்டும் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்தகங்கள் கடையடைப்பு செய்யப்பட்டன.
மருத்துவமனைகளுடன் இணைந்த மருந்தகங்கள், அப்போலோ, மெட்பிளஸ், துளசி பார்மசி, முத்து பார்மசி போன்ற சங்கிலி தொடர் மருந்தகங்கள், முதல்வர் மருந்தகம், தமிழ்நாடு கூட்டுறவு சங்க மருந்தகங்கள், பிரதம மந்திரி ஜன் ஔஷதி கேந்திரா போன்ற அரசு ஆதரவு சில்லறை விற்பனை நிலையங்கள் என சுமார் 5 ஆயிரம் மருந்தகங்கள் கடையடைப்பில் பங்கேற்கவில்லை.
அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, மருந்துகள் கட்டுப்பாட்டுத் துறையால் மாவட்ட வாரியாக உதவி எண்கள், தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கமும் மாவட்ட வாரியாக உதவி எண்களை அறிவித்திருந்தன.
இதன் மூலம் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மருந்துகளை கேட்டு பெற்றனர். ஆனாலும், வழக்கமாக பயன்படுத்தும் நிறுவனங்களின் மாத்திரை, மருந்துகள் கிடைக்காததால் பலர் அவதிக்குள்ளாகினர்

More Stories
தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
அரசு கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: அலுவலர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தல்
கடல்நீரை குடிநீராக்கும் ஆலை விரிவாக்கம்: பணிகளை விரைந்து முடிக்க முதல்வர் விஜய் அறிவுறுத்தல்