TVK Vijay House: வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து தவெக முன்னிலையில் இருப்பதை தொடர்ந்து, நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 23ந் தேதி நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. தபால் வாக்குகள் எண்ணும் போது பின்னடைவில் இருந்த தவெக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும்போது தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இதன் மூலம் எதிர்க்கட்சியின் வியூகம் தோல்வியடைந்துள்ளதை அடுத்து, ஏதாவது அசம்பாவிதங்கள் நடைபெறும் என்று கருதி தவெக தலைவர் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த ஏப்ரல் 23, 2026 அன்று தமிழகத்தின் 17வது சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடந்த இந்த தேர்தலில், 233 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக எந்தொரு கட்சிகளுடனும் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிட்டது. மேலும், சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் மட்டும் சுயேட்சி வேட்பாளர்களுக்கு தவெக ஆதரவு தெரிவித்து இருந்தது.
M. Tech in Data Science & AI – For Working Pros | BangalorePES University
காரணம் திமுகவை அரசியல் எதிரி என்றும், பாஜகவை கொள்கை எதிரி என்றும் தவெக தலைவர் அடிக்கடி சொல்லி வந்ததால், தவெக எந்தவொரு கட்சியுடனும் கூட்டணி வைக்கவில்லை. இதையடுத்து, மொத்தம் 234 தொகுதியிலுமே தவெக தனித்தே போட்டியிட்டது. தவெகவின் வருகை தமிழக அரசியலில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியது என்று சொன்னால் மிகையாது. அதுமட்டுமல்லாமல், இளம் தலைமுறையினர், பெண்கள், முதல் முறை வாக்காளர்கள் என அனைவருமே தவெகவிற்கு தான் ஆதரவளிப்பதாக தெரிவித்து வந்தனர்.
தமிழக மக்கள் ஒரு மாபெரும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற மனநிலையில் இருந்ததால் என்னவோ, என்னைக்கும் இல்லாத அளவாக தமிழகத்தில் 85.15% வாக்குகள் பதிவாகி சரித்திரம் படைத்திருந்தது. மேலும் வெளியூர், வெளி நாடுகளில் இருந்தும் தங்கள் ஜனநாயக கடமைகளை ஆற்றினர். இதுமட்டுமல்லாமல், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அரசியல் பேசுவதற்கும் தவெகவின் வருகை ஒரு முக்கியமான காரணமாக சொல்லப்படுகிறது.
இந்த பூரிப்பு அடங்குவதற்குள் ஏப்ரல் 29ந் தேதி தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி அரசியல் வட்டாரத்தை ஒரு கலக்கம் கலக்கிவிட்டது என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால், எப்போதும் திமுக, அதிமுக என்ற இரு கட்சிகளே தமிழ்நாட்டில் ஆட்சி செய்து வந்த நிலையில், தற்போது இந்த இரு பெரும் திராவிட கட்சிகளுக்கும் டஃப் கொடுக்கும் வகையில் மூன்றாவது கட்சியாக தவெக உருவெடுப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டது.
அந்த அதிர்ச்சி மறைவதற்குள் இன்று தேர்தல் வாக்கு எண்ணிக்கை தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 62 வாக்கு எண்ணிக்கை மையங்களில் நடைபெற்று வரும் இந்த வாக்கு எண்ணிக்கை பணியில், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் திமுக முன்னிலை வகித்து இருந்தது.
ஆனால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் வாக்குகளை எண்ணத் தொடங்கியதும் அதிக இடங்களில் தவெக முன்னிலை வைத்து வருகிறது. கிட்டத்த 5வது சுற்றுகளிலேயே தவெக கிட்டத்தட்ட 107 இடங்களை நெருங்கியது. இது எதிர்க்கட்சிகளின் மத்தியில் பரப்பரப்பை ஏற்படுத்தியதோடு, எந்தவொரு அசம்பாவதமும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய்யின் வீட்டிற்கு பலத்து பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

More Stories
தவெக 105+ இடங்களில் முன்னிலை; 2-ம் இடத்துக்கு திமுக, அதிமுக கடும் போட்டி
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் தொடர்ந்து முன்னிலை
வெற்றி நமதே: காலையிலேயே பூங்கொத்துடன் விஜய் வீட்டிற்கு வந்த ஜோதிடர் ரதன் பண்டிட்